News November 30, 2025
அரசு பஸ்கள் மோதி விபத்து… CM ஸ்டாலின் இரங்கல்

காரைக்குடி அருகே <<18432348>>அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில்<<>> 11 பேர் பலியான சம்பவத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 1, 2025
International 360°: இம்ரான் கான் உடல்நிலை மர்மம் நீடிப்பு

*ரஷ்ய தாக்குதலில் 4 உக்ரைனியர்கள் உயிரிழப்பு. *ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளால், சீன ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் சரிந்தது. *90% A320 விமானங்களின் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டுவிட்டதாக ஏர்பஸ் அறிவிப்பு. *ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பாக இதுவரை 13 பேர் கைது. *பாக்., EX PM இம்ரான் கானின் உடல்நிலை குறித்த மர்மம் நீடிப்பதாக அவரது மகன்கள் குற்றச்சாட்டு.
News December 1, 2025
லெஜெண்ட் டென்னிஸ் வீரர் காலமானார்

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறை வென்ற இத்தாலியை சேர்ந்த டென்னிஸ் வீரர் நிக்கோலா பீட்ரங்கேலி(92) காலமானார். அவரது மறைவுச் செய்தியை இத்தாலி டென்னிஸ் ஃபெடரேசன் வெளியிட்டுள்ளது. World Tennis Hall of Fame-ல் இடம்பெற்ற ஒரே இத்தாலி வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர்தான். மொத்தம் 44 ஒற்றையர் பட்டத்தை வென்ற இந்த லெஜெண்டுக்கு டென்னிஸ் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News December 1, 2025
அரசால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்: தமிழிசை

டெல்டாவில் முறையாக நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு கோட்டை விட்டுள்ளதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். விளைச்சல் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி, கொள்முதலுக்கான ஏற்பாட்டை அரசு செய்யாததால் விவசாயிகள் கண்ணீர் வடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், முளைத்து வீணான நெற்பயிர்களையும் காண CM டெல்டா சென்றாரா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


