News April 26, 2024
திருச்சியில் லாரி மோதி வாலிபர் பலி.!

திருச்சி அண்ணா சிலை சிந்தாமணி அருகே இன்று செல்வராஜ் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, திருச்சியில் சிமெண்ட் இறக்கிவிட்டு கண்டெய்னர் லாரி ஒன்று உசிலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டூவீலரில் மோதியது. இதில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 22, 2025
திருச்சி – காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8:35 மணிக்கு இயக்கப்படும் திருச்சி – காரைக்கால் டெமு ரயில், பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக வரும் 24, 25, 27, 28 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து, திருவாரூர் ஜங்சன் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
திருச்சி: மக்களே உஷார்…! புதிய மோசடி

திருச்சி மக்களே உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் அதில், உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்று பலர் ஏற்கெனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!
News August 22, 2025
திருச்சி: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <