News April 26, 2024
மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படிக் விநியோகிப்பீர் என மத்திய அரசிடம் ஐகோர்ட் வினவியுள்ளது. தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேஷன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியது. அப்போது, அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என வினவிய கோர்ட், அது பற்றி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
Similar News
News February 8, 2026
2032-ல் மோதும் சிறுகோள்.. பாதிப்பு ஏற்படுமா?

60 மீ அகலமுள்ள YR4 சிறுகோள் வரும் டிச.22, 2032-ல் சந்திரன் மீது மோதுவதற்கு 4.3% சதவீதம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சிறுகோள் 2024-ல் பூமியை தாக்கும் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது விலகிச் சென்றது. தற்போது YR4 சிறுகோள் சந்திரன் மீது மோதினால், அந்த சிதறலில் இருந்து உருவாகும் விண்கற்கள் செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என நாசா தெரிவித்துள்ளது.
News February 8, 2026
ஜன நாயகன் படம்.. மகிழ்ச்சி செய்தி வெளியானது

‘ஜன நாயகன்’ படத்தை வெளியிட கோர்ட் வரை சென்றும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதனிடையே விஜய்க்கு நெருக்கமானவராக அறியப்படும் விஷ்ணு ரெட்டி, அமித்ஷாவை நேரில் சந்தித்ததாக முன்னணி நாளிதழில் செய்தி வந்துள்ளது. காங்கிரஸை தள்ளி வைக்க தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நல்ல முடிவு எடுக்கப்படும் என அமித்ஷா உறுதியளித்துள்ளாராம். இதனால் விரைவில் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
News February 8, 2026
பிப்.12-ல் நாடு தழுவிய ஸ்டிரைக்!

மத்திய அரசை கண்டித்து வரும் பிப்.12-ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 4 தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.


