News November 30, 2025

தமிழகத்தில் 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை

image

2024 – 2025 கல்வியாண்டில் 3.51 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் +2 பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 3.23 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், இவர்களில் 16,929 மாணவர்கள் உயர்கல்வியில் சேரவில்லையாம். இதனால், அந்தந்த பள்ளி மேலாண்மை குழு உதவியுடன், உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து காரணங்களை அறிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

Similar News

News December 6, 2025

முருகன் இப்போதுதான் தெரிகிறாரா? சீமான்

image

பல கோடி மக்கள் வாழ்வில் விளக்கின்றி இருளில் கிடக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கின்றனர் என சீமான் விமர்சித்துள்ளார். மலைகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்ட போது ஏன் அவர்கள் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இன்று தான் முருகன் கண்ணுக்கு தெரிகிறாரா என்றும் சீமான் கேட்டுள்ளார்.

News December 6, 2025

மதுரை புதிய மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர்

image

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கையின் பெயரை சூட்டுவதில் தனக்கு பெருமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ₹150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், 950 மீ., நீளம் கொண்டது.

News December 6, 2025

அன்புமணி மீது ராமதாஸ் கிரிமினல் புகார்

image

பாமக உள்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் இன்னும் சற்றுநேரத்தில் சிபிஐயில் புகார் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாமக பொதுக்குழு குறித்த போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிபிஐ இயக்குனரை நேரில் சந்தித்து ஜி.கே.மணி புகார் மனுவை கொடுக்கவிருக்கிறார்.

error: Content is protected !!