News November 30, 2025

நெல்லை: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் கைது

image

ஆதிச்சநல்லூரை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற போஸ். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா வேண்டுகோளின்படி எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி இசக்கி முத்து இன்று தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News December 3, 2025

நெல்லை: வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

image

சுத்தமல்லியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(54). இவரது மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக டவுன் பகுதியை சேர்ந்த சையது அகமது கபீர்(41) என்பவர் கூறி அதற்காக ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடி செய்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கணிக்க கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்து செய்யது அகமது கபீரை இன்று கைது செய்தனர்.

News December 3, 2025

நெல்லை: வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

image

சுத்தமல்லியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(54). இவரது மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக டவுன் பகுதியை சேர்ந்த சையது அகமது கபீர்(41) என்பவர் கூறி அதற்காக ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடி செய்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கணிக்க கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்து செய்யது அகமது கபீரை இன்று கைது செய்தனர்.

News December 3, 2025

நெல்லை: 2.33 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

image

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 2.33 லட்சத்து 464 வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கணக்கீட்டின்படி தெரியவந்துள்ளது. இறந்தவர்கள், கண்டுபிடிக்க இயலாதவர்கள், இரட்டை பதிவு ஆகிய பிரிவுகளில் இவர்கள் அடங்குவர். கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!