News November 30, 2025

புதுச்சேரியில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து டிட்வா புயல் நெருங்கும் நேரத்தில் புதுச்சேரி துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

Similar News

News December 3, 2025

புதுச்சேரி: தேசிய அளவில் விருது பெற்ற காவல் நிலையம்

image

இந்தியாவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த 10 போலீஸ் நிலையங்களை, மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து விருது, சான்று வழங்கி வருகிறது. அதன்படி தேசிய அளவில், சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியலில், பாகூர் போலீஸ் ஸ்டேஷன் 8ம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

News December 3, 2025

புதுச்சேரி: விடுமுறை மாற்றம் – அரசு அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு செயலர் ஹிரன் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அடில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை ஒட்டி புதுவைக்கு நாளை அரசு விடுமுறை மற்றும் அரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை,
டிச.4ஆம் தேதி என்பதிற்கு பதிலாக, இன்று டிச.3ம் தேதிக்கு என திருத்தம் செய்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

BREAKING: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

image

‘டிட்வா’ புயல் காரணமாக சில நாட்களாக புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனாக் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், நாளை (டிச.3) புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!