News April 26, 2024
வாக்கு எண்ணும் பணிகள் குறித்து ஆலோசனை

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை செய்து வருகிறார். தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
Similar News
News August 11, 2025
ராசி பலன்கள் (11.08.2025)

➤ மேஷம் – உயர்வு ➤ ரிஷபம் – நட்பு ➤ மிதுனம் – வெற்றி ➤ கடகம் – பயம் ➤ சிம்மம் – பகை ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – தெளிவு ➤ விருச்சிகம் – ஆதரவு ➤ தனுசு – உறுதி ➤ மகரம் – பெருமை ➤ கும்பம் – பொறுமை ➤ மீனம் – ஓய்வு.
News August 11, 2025
கோவையில் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

கள ஆய்வு செய்வதற்காக கோவை சென்ற CM ஸ்டாலினுக்கு, திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நாளை காலை கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டையில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்க உள்ளார். தொடர்ந்து, பொள்ளாச்சியில் Ex CM காமராஜர், வி.கே.பழனிசாமி, சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரது உருவச்சிலைகளை திறந்து வைக்கவுள்ளார். CM வருகையையொட்டி 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News August 10, 2025
சங்கை அறுப்போம்… கமலுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல்

சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜி-யுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அகரம் நிகழ்ச்சியில் பேசிய கமல் சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி என கமல் கூறியிருந்தார்.