News November 30, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில். இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
Similar News
News December 3, 2025
மயிலாடுதுறையில் 117 வீடுகள் சேதம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சீர்காழி வட்டத்தில் இதுவரை 117 வீடுகள் சேதமடைந்துள்ளன. 106 கூரை வீடுகள் மற்றும் 9 ஓட்டு வீடுகள் பகுதியாக சேதம் ஏற்பட்டுள்ளது. 2 ஓட்டு வீடுகள் முழுமையாக சேதம் என மொத்தம் 117 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News December 3, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

பொதுமக்கள் தங்களது whatsapp-ல் இதுபோன்று வரும் போலி செய்திகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு மற்றும் செல்போன் தரவுகள் சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்படலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்களுக்கு 1930 எண்ணில் புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
News December 3, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், இன்று(டிச.2) இரவு 10 மணி முதல் நாளை(டிச.3) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்படுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் இன்று ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலிசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு, பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.


