News November 29, 2025
விமான பயணக் கட்டணம் பல மடங்கு உயர்வு

டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.3,129ஆக இருந்த கட்டணம் ரூ.20,599 ஆகவும், சென்னை-திருச்சி இடையே ரூ.3,129ஆக இருந்த கட்டணம் ரூ.55,626 ஆகவும் உயர்ந்துள்ளது.
Similar News
News December 1, 2025
சென்னை: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 1, 2025
சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <
News December 1, 2025
BREAKING: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறையா?

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை இல்லாத காரணத்தினால் விடுமுறை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


