News November 29, 2025
தஞ்சாவூர்: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தஞ்சாவூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள 275 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 54 படகுகள், 24613 தடுப்பு கம்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும், 4500 முதல்நிலை பணியாளர்கள், 300 ஆப்தமித்ரா பணியாளர்கள், 195 கால்நடை பணியாளர்கள், 30 பாம்பு பிடிப்பவர்கள், 131 மரம் வெட்டுபவர்கள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
தஞ்சை: 327 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார் அடங்கிய 327 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News December 1, 2025
தஞ்சாவூர்: BIKE வைத்திருப்போர் கவனத்திற்கு!

தஞ்சாவூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். இந்த<
News December 1, 2025
தஞ்சை : ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

தஞ்சை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


