News April 26, 2024

தி.மலை அருகே குவிந்த மக்கள்

image

ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு மேட்டுகுடிசை காரமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்கிவரும் அருள்மிகு ஸ்ரீ குள்ள செல்லியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.யாக கலசத்தில் யாக பூஜைகள் நடத்தி கலச புறப்பாடு கொண்டு கோபுர கலசத்தில் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி அம்மனை வணங்கினர்.

Similar News

News August 19, 2025

திருவண்ணாமலை: ரயில்வே துறையில் வேலை! APPLY NOW

image

திருவண்ணாமலை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விவரங்களுக்கு https://rrccr.com/ என்ற இணைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை பெற விரும்பும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 19, 2025

தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆக.20)
திருவண்ணாமலை, வந்தவாசி, துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், அனக்காவூர், தண்டராம்பட்டு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று, இறப்பு சான்று போன்றவற்றிக்கு மனு அளித்து பயன்பெறலாம். மேலும், <>இங்கு கிளிக் செய்து <<>>முகாம் நடைபெறும் இடங்களை கண்டறியலாம்.

News August 19, 2025

தி.மலை அருகே விபத்து

image

தி.மலை, அமர்நாத்புதூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களது மகள் திருமணத்திற்கு, உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்க பைக்கில் செல்வராஜ், பச்சையம்மாள் இருவரும் சென்றுள்ளனர். அப்போது கலசபாக்கம் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியதில் பச்சையம்மாள் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!