News April 26, 2024
ராணிப்பேட்டை: ஆடுகளுக்கு தடுப்பூசி – கலெக்டர் அறிவிப்பு

ராணிப்பேட்டை முழுவதும் 1.54 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி இன்று(ஏப்.26) தெரிவித்துள்ளார். செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் பரவுவதை தடுக்க வரும் 29ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மாவட்டம் முழுவதும் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. 4 மாதத்திற்கு குறைவான குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி போடக்கூடாது.
Similar News
News November 6, 2025
அரக்கோணத்தில் ரயில் மோதில் பலி

ராணிப்பேட்டை, அரக்கோணம் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தார். இது குறித்து நவ.5 ம் தேதி அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.
News November 6, 2025
அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது

அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக இருப்பவர்களிடம் இரவு நேரங்களில் செல்போன் திருடு போனது .இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது. இந்நிலையில் நேற்று இரவு நோயாளி ஒருவரிடம் செல்போன் திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டார். இன்று நவம்பர் 5ம் தேதி டவுன் போலீசார் விசாரித்து வழக்குப்பதிந்து ஆத்தூரை சேர்ந்த மாரியப்பன் 45 என்பவரை கைது செய்தனர்.
News November 6, 2025
தண்டவாளத்தை கடக்கும் முயன்றவர் ரயில் மோதி பலி

அரக்கோணம் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தார். இது குறித்து நவ.5 ம் தேதி அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார் என விசாரித்து வருகிறார்


