News November 29, 2025

திருவள்ளூர் கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

image

திருவள்ளூர்: வியாபாரிகள் ஆந்திர நெல் வாங்கி வந்து, விவசாயிகள் போர்வையில் திருவள்ளூரில் அமைக்கப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களில் விற்று முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக நேற்று நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் அளித்த புகாரளித்தனர். இதுகுறித்த குற்றச்சாட்டுகள் பூதாகரமாக வெடித்ததையடுத்து, நடப்பு ஆண்டில், அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களும் உடனடியாக மூடப்படும் என, கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

ஆக்கிரமிப்பால் நிரம்பாத ஏரிகள்

image

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்தும், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 574 ஏரிகளில், 182 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஆக்கிரமிப்பு, வரத்து கால்வாய் சீரமைக்காதது போன்ற காரணங்களால், மீதம் உள்ள ஏரிகள் நிரம்பாதது, விவசாயிகளுக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. மழை பெய்தாலும், ஆக்கிரமிப்பு காரணமாக, அனைத்து ஏரிகளும் 100 சதவீதம் நிரம்புவதற்கு வாய்ப்பில்லை.

News December 5, 2025

திருவள்ளூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News December 5, 2025

திருவள்ளூரில் 3.89 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

image

தமிழகத்தில் டிச.16-ம் தேதியுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணியில் 77.52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 10.40 லட்சம் பேர் (இறந்தவர்கள் மட்டும் 1.49 லட்சம்) பேர் நீக்கப்படலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் 3.89 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!