News November 29, 2025

குமரி: கஞ்சா வழக்கில் 458 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று கூறியதாவது, போதையில்லாத குமரி என்ற இலக்கினை நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். தொடர் நடவடிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா வழக்குகளில் 458 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் விற்பவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

Similar News

News December 3, 2025

குமரி: பெண் மருத்துவரிடம் தகராறு செய்த நபர்

image

தக்கலை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்த மடிச்சல் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (40) என்பவரை, மருத்துவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர். நெற்றி காயத்திற்கு சிகிச்சை பெற வந்தபோது அவர் ரகளையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

News December 3, 2025

குமரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

குமரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 3, 2025

குமரி: தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

image

குளச்சல் அருகே பன விளை சேர்ந்தவர் ஞானசௌந்தரி (64) இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஆனப்பாங்குழியில் உள்ள அக்கா வீட்டில் அவரது பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் பலா மர இலைகளை பறிப்பதற்காக பக்கத்து வீட்டு மாடியில் ஏறிய போது கீழே விழுந்த அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!