News April 26, 2024
கார்களுக்கு போலி ஏர் பேக் தயாரித்த ஆலைக்கு சீல்

சென்னையில் கார்களுக்கு போலி ஏர் பேக் தயாரிக்கும் ஆலையை கண்டுபிடித்து சீல் வைத்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தரமான ஏர் பேக் விலை ₹1 லட்சமாக இருக்கும்போது, அதை போலியாக தயாரித்து ₹27,000க்கு விற்றதையும், ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்ததையும் கண்டுபிடித்தனர். ₹2 கோடி மதிப்பிலான 921 ஏர் பேக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 25, 2026
CINEMA 360°: ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் ஜீவா படம்

*ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ படம் டிச. 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. *ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும் ‘4th Floor’ படம் பிப்ரவரி மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. *வடிவுக்கரசி நடித்த “க்ராணி” படத்தின் டிரெய்லர் வெளியானது.
News January 25, 2026
தேர்தல் அறிவித்த பிறகுதான் எல்லாம் முடிவாகும்: வைகோ

தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதிகளை கொடுக்காமல் ஓரவஞ்சகம் செய்த PM மோடி, நேற்று வெறும் பொய்களை மட்டும் அவிழ்த்துவிட்டு சென்றதாக வைகோ விமர்சித்துள்ளார். தேர்தல் அறிவித்த பிறகுதான், எத்தனை தொகுதியில் போட்டி, தனிச் சின்னத்தில் போட்டியா என்பதெல்லாம் என்பது குறித்து முடிவுசெய்யப்படும். அதுகுறித்து இப்போதே சொல்ல முடியாது எனக் கூறிய அவர், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.
News January 25, 2026
சூர்யாவின் 50-வது படத்தை இயக்குகிறாரா மாரிசெல்வராஜ்?

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதற்கு அடுத்தாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சூர்யா நடிக்கிறார். இப்படி பிஸியாக உள்ள அவர் மாரி செல்வராஜுடன் இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது அவரது 50-வது படம் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. சூர்யா- மாரி காம்போ எப்படி இருக்கும்?


