News April 26, 2024

தமிழக அமைச்சர்கள் கைதாகலாம்: எச்.ராஜா

image

டெல்லி, ஹைதராபாத்தை அடுத்து சாராய ஊழல் வழக்கு, ஜீன் 4ஆம் தேதிக்குப் பிறகு சென்னைக்கும் வரும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், “தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, தமிழகத்தில் சாராயம் உற்பத்தி செய்யும் அதிபர்கள், அமைச்சர்கள் அனைவரும் பிறகு சிறைக்குச் செல்வர்” என்றார். மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால், KCR கவிதா ஆகியோர் கைதானது கவனிக்கத்தக்கது.

Similar News

News August 24, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் ஒருநாள் விடுமுறை..

image

கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம்!, நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.

News August 24, 2025

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

image

இன்று காலை 10 மணியில் இருந்து Airtel நெட்வொர்க் சேவை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுமார் 7,000 பேர் X உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள், ஏர்டெல் சேவை மையங்களில் புகாரளித்து வருகின்றனர். இதனையடுத்து, சேவையை மீட்டெடுக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முன்னதாக, கடந்த வாரமும் சில இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டது.

News August 24, 2025

அமித்ஷாவை கடுமையாக விமர்சித்த ஆ.ராசா

image

சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்து விட்டு, தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்க மனமில்லை என்று மத்திய பாஜக அரசை ஆ.ராசா விமர்சித்துள்ளார். தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் கீழடி உண்மையை ஏற்கத் திராணி இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களின் கைதைத் தடுக்க வக்கில்லை என சாடிய அவர், இந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் எனப் பேசக் கொஞ்சமும் வெட்கமில்லையா அமித்ஷா அவர்களே! என்று கொந்தளித்துள்ளார்.

error: Content is protected !!