News November 29, 2025

திருச்சி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

image

டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.29) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 454 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை மனு, விதவை உதவித்தொகை மனு, விபத்து நிவாரணத் தொகை மனு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு மனு உள்ளிட்ட 454 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

திருச்சி: BIKE வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். இந்த <>லிங்கில் சென்று<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News December 1, 2025

திருச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருச்சி மாவட்ட மக்களே, உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!