News April 26, 2024
பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்

மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அனைவரும் சாதனை எண்ணிக்கையில் பங்கேற்க கேட்டுக்கொள்வதாக கூறிய அவர், அதிக வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்றும், உங்கள் வாக்கு, உங்கள் குரல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 14, 2025
Sports Roundup: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

*8 அணிகள் பங்கேற்கும் ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்குகிறது. *குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷெர்பேன் ரூதர்போர்ட் 2.6 கோடிக்கு MI அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். *Bondi ஓபன் ஸ்குவாஷில் ரதிகா சீலன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *உலகக் கோப்பை செஸ் 4-வது ரவுண்டில் பிரக்ஞானந்தா தோல்வி. *ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், மகளிர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார்.
News November 14, 2025
Cinema 360°: ‘கும்கி 2’ படத்திற்கு U சான்று

*’கும்கி 2′ படத்திற்கு U சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *விதார்த்தின் ‘மருதம்’ சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிப்பு. *பிரபாஸின் Spirit ஷூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என அறிவிப்பு. *மம்மூட்டியின் ‘களம்காவல்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
News November 14, 2025
ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. எப்போது தெரியுமா?

2026 IPL சீசனுக்கான வீரர்கள் ஏலம், வரும் டிச.16-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை மினி ஏலம் என்பதால், ஒரே நாளில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தக்கவைத்த வீரர்களின் விவரம் இன்னும் 2 நாள்களில் வெளியான பிறகு, ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். வீரர்கள் விடுவிப்பு தொகையுடன் கூடுதலாக ₹5 கோடி வரை ஒவ்வொரு அணியும் ஏலத்தில் செலவு செய்யலாம்.


