News April 26, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வருகை பதிவேடு, மக்களை தேடி மருத்துவம் அளிக்கப்படும் சிகிச்சைகள்,நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News

News August 21, 2025

தாம்பரம்-திருச்சி ரயில் சேவை நீட்டிப்பு

image

திருச்சி – தாம்பரம் – திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06190/91), ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பகல் நேர ரயில், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் தொடர்ந்து இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

News August 21, 2025

காட்டாங்குளத்தூர்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால்? இதை செய்யுங்க

image

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News August 21, 2025

செங்கல்பட்டு: LIC-யில் வேலை, ரூ.1 லட்சம் சம்பளம்!

image

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து செப்.09ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!