News April 26, 2024
மேட்டுப்பாளையம்: போக்சோ சட்டத்தில் இருவர் கைது

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவன் மற்றும் கூலி தொழிலாளி லோகேஷ் உள்ளிட்ட இருவரும் தகாத முறையில் நடந்துள்ளனர். இதனால் சிறுமி ஐந்து மாத கர்ப்பமானார். சிகிச்சைக்காக நேற்று மேட்டுப்பாளையம் ஜிஎச் சென்றபோது இதுகுறித்து தெரியவந்தது. மேட்டுப்பாளையம் மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News August 27, 2025
கோவை:இலவச வீட்டு மனை வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 27, 2025
கோவை: கூட்டுறவு வேலை விண்ணபிப்பது எப்படி?

▶️கோவை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க https://www.drbcbe.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும்▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சூப்பர் வேலை வாய்ப்பு ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
1.20கோடி திருடிய வீட்டு முதலாளயின் ருசிகர வாக்குமூலம்!

கோவை கணுவாயை சேர்ந்த வேல்முருகனின் வடவள்ளி வீட்டில் பிரியா என்பவர் குடியிருந்து வந்தார். இந்நிலையில் பிரியா வீட்டில் வைத்திருந்த ரூ.1.20 கோடி பணம் திருடு போனது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் வீட்டின் உரிமையாளர் வேல்முருகனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். வீட்டை அசுத்தமாக வைத்ததை போட்டோ எடுக்க சென்ற போது பணத்தை பார்த்த ஆசையில் திருடிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.