News April 26, 2024
சுப காரியங்கள் கைகூட சுதர்சனரை வணங்குங்கள்!

‘ஹரியின் சுதர்சனத்தை உபாசிப்பவர்கள் ஆனந்த வாழ்வை வாழ்வார்கள்’ என்கிறது பாகவதம்.
மகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர். எனவே சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று சுதர்சனருக்கு நெய் தீபமேற்றி, துளசி இலை மாலை அணிவித்து, பன்னிரு முறை அவரை வலம் வந்து, ‘ஜய ஜய ஶ்ரீசுதர்ஸனா’ என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்கினால், சுப காரியங்கள் கைகூடும் என்பது ஐதிகம்.
Similar News
News April 6, 2026
சமூகநீதி பேசுவதற்கு மட்டும் அல்ல: மாணிக்கம் தாகூர்

மதுரை மேலூர் பொது தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த Ex MP விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி, சமூகநீதி பேசுவது மட்டும் அல்ல.. வாய்ப்பு கொடுப்பதில் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் அதை நிரூபித்து உள்ளது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதன்மூலம் காங்கிரஸை பாராட்டுகிறாரா அல்லது திமுகவை சாடியுள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News April 6, 2026
ராணிப்பேட்டையில் மீண்டும் களமிறங்கும் காந்தி!

ராணிப்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளராக தானே மீண்டும் போட்டியிடுவதாக அமைச்சர் காந்தி உறுதிபடுத்தியுள்ளார். தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தன்னை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துவிட்டதாகவும், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் காந்தி கூறியுள்ளார். முன்னதாக காந்தியின் மகன் வினோத் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
News April 6, 2026
உங்க போன் இப்படி ஆச்சுனா… உஷார் மக்களே

இன்றைய சூழலில், யாருடைய போனையும் ஈசியாக ஹேக் செய்து விடலாம் என்ற நிலை உள்ளது. உங்க போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த Signs மூலம் தெரிஞ்சிக்கலாம் ➤போன் பேசும் போது, அசாதாரண ஒலிகள் கேட்கும் ➤ஆப்கள் தானே அடிக்கடி ஓபன் ஆகும் ➤போனில் ஏற்கெனவே யூஸ் பண்ண இணையதளங்கள், தற்போது ஓபன் போதும் வித்தியாசமாக தெரியும் ➤யூஸில் இல்லாத போதும் பேட்டரி சூடாகும் ➤போன் ஆப் ஆவதற்கும் நீண்ட நேரம் எடுக்கும்.


