News April 26, 2024

சுப காரியங்கள் கைகூட சுதர்சனரை வணங்குங்கள்!

image

‘ஹரியின் சுதர்சனத்தை உபாசிப்பவர்கள் ஆனந்த வாழ்வை வாழ்வார்கள்’ என்கிறது பாகவதம்.
மகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர். எனவே சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று சுதர்சனருக்கு நெய் தீபமேற்றி, துளசி இலை மாலை அணிவித்து, பன்னிரு முறை அவரை வலம் வந்து, ‘ஜய ஜய ஶ்ரீசுதர்ஸனா’ என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்கினால், சுப காரியங்கள் கைகூடும் என்பது ஐதிகம்.

Similar News

News September 19, 2025

Robo Shankar-ன் நிலைமை வராமல் இருக்க இத கவனியுங்க

image

மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு தோல், கண்கள் & உடலின் சில பகுதிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதற்கு ‘பிலிருபின்’ தான் காரணம். பிலிருபின் என்பது சிவப்பு ரத்த அணுக்கள் உடையும்போது உற்பத்தியாகும் ஒரு மஞ்சள் நிறமி. 3 காரணங்களால் இது வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. ➤கல்லீரல் நோய் ➤பித்த நீர் அடைப்பு ➤ரத்த சிவப்பணுக்கள் அதிக அளவில் சிதைவது. இதில் ரோபோ சங்கரை பாதித்தது கல்லீரல் நோய்தான்.

News September 19, 2025

RECIPE: ஹெல்தியான பச்சை பயறு புலாவ்!

image

*குக்கரில் நெய் விட்டு, மிதமான தீயில் கசகசா, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலாப் பொருள்களை சேர்த்து வதக்கவும் *பிறகு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், எலுமிச்சை சாறு சேர்க்கவும் *இதில், தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து, அரிசி- பச்சைப்பயறு கலவையை சேர்த்து 3 விசில் வரை காத்திருந்தால், சுவையான பச்சைப்பயறு புலாவ் ரெடி. SHARE IT.

News September 19, 2025

நான் டிரம்பின் ஆதரவாளர் அல்ல: போப் லியோ

image

தான் டிரம்பின் ஆதரவாளர் அல்ல என போப் லியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசியலில் தலையிட விரும்பவில்லை என்ற அவர், அதேநேரம் அங்கு நிலவும் புலம் பெயர்ந்தோர் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார். இதுவரை தான் டிரம்பிடம் பேசவில்லை என கூறிய போப், அவரின் கொள்கை முடிவுகளில் மாறுபட்ட கருத்த உள்ளதாகவும் தனது முதல் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!