News November 27, 2025

வேலூரில் அவலம் – விவரம் வெளிவந்தது!

image

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 13க்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை அந்த தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம், முழு மருத்துவ பரிசோதனை ஆகியவை செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வேலுார் கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இன்று (நவ.27) மனு அளித்துள்ளனர்.

Similar News

News November 27, 2025

வேலூர்: விஐடி பல்கலைக்கழகம் சார்பில் 1 கோடி உதவி தொகை!

image

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை சார்பில் 1100 மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கும் விழா வரும் நவ.29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு கல்வி உதவி தொகைகளை வழங்குகிறார். என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 27, 2025

வேலூர் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

image

வேலூர் மாவட்டத்தில் துணை ஆய்வாளர் பதவியில் பணியாற்றிய 9 பேர் ஆய்வாளர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காவல்துறை தரப்பில் புதிய காவல் நிலைய பணி நியமன ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை, வேலூர் & ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 6 ஆய்வாளர்களுக்கு பணியிடம் மாற்றும் உத்தரவை சரக டிஐஜி தர்மராஜன் தாகூர் இன்று (நவ.27) வெளியிட்டுள்ளார்.

News November 27, 2025

வேலூரில் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் முகாம்!

image

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் டிசம்பர் 2025 முதல் மாதத்தின் புதன்கிழமைகளில் நடைபெற இருக்கிறது. இது அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடைபெற உள்ளது. மேலும், வெள்ளிக் கிழமைகளில் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.27) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

error: Content is protected !!