News April 26, 2024

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா பஞ்சாப்?

image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க பஞ்சாப் அணி இப்போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா அணி 21 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் வென்றுள்ளன.

Similar News

News November 13, 2025

கனமழை: நாளை 16 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

image

இன்றிரவு செங்கை, காஞ்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, நெல்லை, தி.மலை, விழுப்புரத்தில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. காலையும் மழை நீடித்தால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில், நாளை இந்த மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை மறக்காமல் எடுத்து செல்லவும்.

News November 13, 2025

ஐபிஎல் 2026: வெறித்தனமாக பயிற்சி செய்யும் தோனி

image

2026 ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் வகையில் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தினமும் 5 மணி நேரம் வலைப்பயிற்சி, ஜிம்மில் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதுவே அவருக்கு One Last Dance-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனது முழு திறனையும் வெளிப்படுத்த தோனி தயாராகி வருகிறார். எத்தனை பேர் தோனியின் ஆட்டத்தை காண ஆவலாக இருக்கீங்க?

News November 13, 2025

FLASH: சம்பள உயர்வு… CM ஸ்டாலின் அறிவிப்பு

image

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான <<18275236>>அகவிலைப்படியை 3% உயர்த்தி<<>>, ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, டிசம்பரில் 5 மாத அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்கப்படும். இதன்மூலம், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு ₹1,829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!