News November 27, 2025
WPL திருவிழா: ஜன.9-ல் தொடங்குகிறது

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஜன.9-ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நவி மும்பையில் உள்ள DY Patil மைதானம், வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி பிப்.5-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 3 சீசன்களில், 2 முறை மும்பையும், ஒரு முறை பெங்களூருவும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 1, 2025
International 360°: இம்ரான் கான் உடல்நிலை மர்மம் நீடிப்பு

*ரஷ்ய தாக்குதலில் 4 உக்ரைனியர்கள் உயிரிழப்பு. *ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளால், சீன ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் சரிந்தது. *90% A320 விமானங்களின் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டுவிட்டதாக ஏர்பஸ் அறிவிப்பு. *ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பாக இதுவரை 13 பேர் கைது. *பாக்., EX PM இம்ரான் கானின் உடல்நிலை குறித்த மர்மம் நீடிப்பதாக அவரது மகன்கள் குற்றச்சாட்டு.
News December 1, 2025
லெஜெண்ட் டென்னிஸ் வீரர் காலமானார்

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறை வென்ற இத்தாலியை சேர்ந்த டென்னிஸ் வீரர் நிக்கோலா பீட்ரங்கேலி(92) காலமானார். அவரது மறைவுச் செய்தியை இத்தாலி டென்னிஸ் ஃபெடரேசன் வெளியிட்டுள்ளது. World Tennis Hall of Fame-ல் இடம்பெற்ற ஒரே இத்தாலி வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர்தான். மொத்தம் 44 ஒற்றையர் பட்டத்தை வென்ற இந்த லெஜெண்டுக்கு டென்னிஸ் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News December 1, 2025
அரசால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்: தமிழிசை

டெல்டாவில் முறையாக நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு கோட்டை விட்டுள்ளதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். விளைச்சல் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி, கொள்முதலுக்கான ஏற்பாட்டை அரசு செய்யாததால் விவசாயிகள் கண்ணீர் வடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், முளைத்து வீணான நெற்பயிர்களையும் காண CM டெல்டா சென்றாரா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


