News November 27, 2025
கந்தம்பாளையம் அருகே மின் கம்பத்தில் மோதி பலி!

நாமக்கல் கந்தம்பாளையம் அருகே மேட்டாம்பாறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாரிசாமி (30). நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, கந்தம்பாளையம் அருகே செல்லப் பம்பாளையத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சோலார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News December 1, 2025
நாமக்கல்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News December 1, 2025
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடமாலை அலங்காரம் அறிவிப்பு!

நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி (19.12.2025) நாளை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடமாலை அலங்காரம் செய்யப்படும் என்பது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் நடைபெற உள்ளது. இதற்கான வடை செய்வதற்கான பணிகள் வரும் டிசம்பர்-15ஆம் தேதி தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 1, 2025
நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

நாமக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <


