News November 27, 2025

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த மேற்பனைக்காட்டை சேர்ந்தவர் ஜனனி(19). இவர் புதுக்கோட்டை தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது தாயுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகம் அவரது இல்லத்தில் எலி பேஸ்ட்டை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரில், கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

புதுக்கோட்டை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

image

கே.புதுப்பட்டியில் சுமார் 20 வருடங்களாக பிச்சை எடுத்து, வசித்து வந்த 85 வயது முதியவர் வயது முதிர்வு காரணமாக காமண்டி முக்கம் அருகில் இறந்த கிடந்தார். அவர் யார் எந்த ஊர் என்பது தெரியவில்லை. அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரைப் பற்றி தெரிந்தால் 94988100761 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என இன்ஸ்பெக்டர் தங்கம் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 28, 2025

புதுக்கோட்டை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!

error: Content is protected !!