News November 27, 2025
சென்னை: முதலிரவில் தாம்பத்யம் போது தகராறு- மாப்பிளை கைது!

புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஷ்வா(33). இவருக்கும், திருத்தணியைச் சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கும், இரு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கணவர் வீட்டில் முதலிரவு நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அறைக்குள், தாம்பத்யம் சம்பந்தமாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோஷ்வா, மனைவியை தாக்கியுள்ளார்.புகாரின் பேரில் போலீசார் ஜோஷ்வாவை நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 27, 2025
சென்னையில் மாடு முட்டி முதியவர் பலி

சென்னை, மாதவரம் அடுத்த மாத்துாரில் கடந்த 14ம் தேதி சைக்கிளில் பால் போடும் பணியில் இருந்தார். ஒரு பசு மாடு, குதிரையுடன் உணவிற்காக தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளது. திடீரென மிரண்டு ஓடிய பசு மாடு முதியவர் ஆனந்த் மீது மோதியது. இதில் கீழே விழுந்த முதியவர் பலத்தகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு அரசு
ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று உயிரிழந்தார்.
News November 27, 2025
சென்னை மக்களே ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

சென்னை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News November 27, 2025
சென்னை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சென்னை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


