News November 27, 2025

அரியலூர்: பெண் உட்பட இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார்,. இவர் தனது பெண் தோழியான பாஞ்சாலையுடன் சேர்ந்து கடந்த நவ.16ஆம் தேதி வங்காரம் காட்டுப் பகுதியில், மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வழக்கில், தளவாய் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எஸ்பி பரிந்துரையின் பெயரில், ஆட்சியர் ரத்தினசாமி இருவர் மீதும் குண்டாஸ் சட்டம் பிறப்பித்தார்.

Similar News

News November 27, 2025

அரியலூர்: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, அரியலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9842074680) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News November 27, 2025

அரியலூரில் மின்தடை அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம் கீழபழுர் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.28) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. எனவே கீழபழுர் மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பொய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.

News November 27, 2025

அரியலூர்: அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் நலம்காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் வருகிற நவ.29 தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது மற்றும் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ சேவை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!