News April 25, 2024
முறையாகப் பராமரிக்க அப்போதே சொன்னேன்

திருச்சியில் அரசுப் பேருந்தின் இருக்கை உடைந்து நடத்துநர் தூக்கி வீசப்பட்டது தொடர்பாக
அரசைச் சாடியுள்ளார் இபிஎஸ். சென்னை மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் கீழே விழுந்தபோதே, பேருந்துகளை முறையாகப் பராமரிக்க அரசை வலியுறுத்தியதாகக் கூறினார். மேலும், தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளதால், அரசுப் பேருந்து மீது மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
Similar News
News September 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 464 ▶குறள்: தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். ▶பொருள்: களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.
News September 20, 2025
டி20-ல் இந்தியா அரிய சாதனை

சர்வதேச டி20-யில் 250 போட்டிகள் என்ற மைல்கல்லை இந்திய அணி எட்டியுள்ளது. நேற்றைய ஓமன் உடனான போட்டியின் போது இந்திய அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இருப்பினும், அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அணிகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 275 போட்டிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்திலும், 235 போட்டிகளுடன் நியூசிலாந்து 3-ம் இடத்திலும் உள்ளது.
News September 20, 2025
இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு

இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வந்த சுரேகா யாதவ் ஓய்வு பெற்றுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 1989-ல் ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியை தொடங்கினார். இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், சரக்கு ரயில், பயணிகள் ரயில்களை இயக்கியுள்ளார். அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்ற நிலையில், வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.