News November 27, 2025

நீர்வளத்துறை அலுவலகத்தில் மரங்கள் ஏலம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

நாகர்கோவில்: தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது

image

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு துப்பரவு தொழிலாளி பால்ராஜ் என்பவரை குடி போதையில் அடித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒரு ஆண்டுகாலமாக குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று (நவ.27) திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 27, 2025

குமரி: மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

குமரி மாவட்ட மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 27, 2025

குமரியில் SIR படிவங்கள்.. கலெக்டர் புது தகவல்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் 15,61,354 கணக்கிட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவரையிலும் 12,37,466 கணக்கிட்டு படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 77.69 சதவீதம் ஆகும்.

error: Content is protected !!