News November 26, 2025
சேலம் அருகே ஜேசிபி மோதி பலி!

சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) கடந்த 22ஆம் தேதி டூ-வீலரில் அயோத்தியாப்பட்டணம் நோக்கி சென்ற போது, வான்ராயன் காடு மேடு அருகே முன்பிருந்த ஜேசிபி திடீர் பிரேக் அடிப்பதால், அதன் பக்கெட் அவரது தலையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
சேலம்: உங்க ஸ்மார்ட்போன் தொலைஞ்சிடுச்சா?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 28, 2025
சேலம்: டிச.13- ல் ‘மக்கள் நீதிமன்றம்’

சேலம் மாவட்டத்தில் ‘தேசிய மக்கள் நீதிமன்றம்’ வரும் டிச.13-ஆம் தேதி நடக்க உள்ளது. அதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்துக் கொள்ளலாம் என சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற முன் வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும் இலவசமாக தீர்வுக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
சேலம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சேலம் மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


