News April 25, 2024

பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது

image

சுபமுகூர்த்த தினத்தையொட்டி (ஏப்ரல் 26) தோவாளை சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள், குமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களை கொள்முதல் செய்வார்கள். இந்நிலையில், மல்லிகை நேற்று கிலோ ₹300க்கு விற்பனையான நிலையில், இன்று ₹600ஆக உயர்துள்ளது. இதேபோல, பிச்சிப்பூ ₹1500, முல்லை ₹1400, அரளி ₹400, சம்பங்கி ₹300, ரோஸ் ₹200க்கு விற்பனையாகிறது.

Similar News

News March 14, 2026

எரிபொருள் விலை எதிரொலி.. விமான டிக்கெட் விலை உயர்வு!

image

எண்ணெய் விலை உயர்வு காரணமாக, விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் எரிபொருள் கட்டணத்தை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. ஏற்கனவே AirIndia கூடுதல் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், Indigo-வும் கட்டணத்தை அதிகரித்துள்ளது. நாளை முதல், சேவைகளைப் பொறுத்து கூடுதலாக ₹425-₹2,300 வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மறுபுறம், spicejet, Akasa air நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.

News March 14, 2026

லெனின் பொன்மொழிகள்

image

▶பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை. ▶நம்பிக்கை நல்லதுதான். ஆனால் கட்டுப்பாடு சிறந்தது. ▶நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே; நீ விரும்புவதை உலகம் எதிர்த்தாலும் செய்து முடி. ▶தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். ▶பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.

News March 14, 2026

விஜய்யின் ஒப்புதல் இன்றி இது நடைபெறாது: துரை வைகோ

image

எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால்தான், மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் என விஜய்க்கு துரை வைகோ அறிவுறுத்தியுள்ளார். திமுக, பாஜகவை எதிரி எதிர்த்துதான் அரசியலுக்கு வந்ததாக விஜய் கூறினார்; ஆனால் திடீரென தவெக மா.செ கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் கூட்டணி விரும்புவதாக கூறுவது தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என்பதையே காட்டுகிறது என்றும், விஜய்யின் முடிவு காலப்போக்கில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!