News April 25, 2024

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அறிவிப்பிற்கு காத்திருப்பு

image

நடப்பாண்டு முதல் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளில் முழுமையாக சேர்க்கை செயல்பாடுகள் ஒற்றை சாளர முறைக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியானது. எனினும் இதுவரை மாணவர் சேர்க்கை தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வியிடம் கேட்டபோது இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

Similar News

News March 6, 2026

நாம் தமிழர் கட்சியினர் கைது

image

கோவையில் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறித் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாவில் பெரும் போராட்டங்களுக்கு இடையே இப்படம் வெளியான நிலையில், கோவையில் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

News March 5, 2026

கோவை: பசு மாடு வாங்க ரூ.1,00,000

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 5, 2026

BREAKING: சூலூர் அருகே சுட்டுப் பிடித்த போலீசார்

image

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் கத்தியுடன் மிரட்டிய ரவுடி பாலமுருகன், பிடிபடும் போது உதவி ஆய்வாளர் யுவராஜைக் கத்தியால் வெட்டினார். இதைக் கண்ட ஆய்வாளர் பிரேம் ஆனந்த், தற்காப்பிற்காக ரவுடியைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!