News April 25, 2024

கரூர்: மகனை கொலை செய்து நாடகமாடிய தந்தை

image

கரூர் ஜெகதாபியில் மாரியப்பனுக்கும், அவரது தந்தை மாணிக்கத்துக்கும் வீடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாணிக்கம் தனது மகள் வழி பேரனை வரவழைத்து, மாரியப்பனை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதில் மாரியப்பன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில், மாணிக்கத்தை இன்று கைது செய்தனர். மேலும், கொலையை மறைக்க விபத்தில் மகன் இறந்தது போல் நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது.

Similar News

News November 7, 2025

கரூரில் இன்று பல இடங்களில் மின்தடை…!

image

கரூர் மாவட்டம்; புலியூர், புகழூர், கரூர் டவுன், அரவக்குறிச்சி, ஆண்டிச்செட்டிப்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட 6 துணை மின்நிலையங்களில் நிலையங்களில் இன்று (நவ.07) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

கரூரில் 3 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம், குளித்தலை சிந்தாமணிப்பட்டி பகுதியில் வெளியூர் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக மைலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைதின் (48), கமருதீன் (58), மற்றும் குருணிக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த முஜீப் ரகுமான் (50) ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அசாம் மாநில லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 7, 2025

வாலாந்தூரில் வீட்டில் மது விற்றவர் கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் செந்தில்குமார் 52. இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற செந்தில்குமார் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!