News November 26, 2025
நாகை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்தி வயல் வரப்பு ஒரங்களில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியும் என மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு தேவையான உளுந்து விதைகள் மற்றும் விதைநேர்த்திக்கு தேவையான மருந்து வகைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் 50% மானியத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
நாகை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று!

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469-ம் ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெற உள்ளது. கடந்த நவ.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின், முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து இன்று கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நாகை மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 1, 2025
நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவிய ‘டிட்வா’ புயல் தற்போது சென்னைக்கு அருகே வலுவிழந்து மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.1) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


