News November 26, 2025

பெரம்பலூர்: கோயிலுக்கு சென்றவர் பரிதாப பலி

image

சேலத்தை சேர்ந்தவர் கருப்பையா சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். இவரும், இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த காளிமுத்துவும் சபரிமலை அய்யப்பசாமி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் நான்குரோடு சந்திப்பில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார், கருப்பையா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News March 7, 2026

பெரம்பலூர்: திமுக மகளிர் அணியினர் பிரச்சாரம்

image

பெரம்பலூர் அரணாரையில் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக “வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை” என்ற பெயரில் வீடு வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வு, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், திமுக மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News March 7, 2026

பெரம்பலூர்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் வருகிற மார்ச் 10-ம் தேதி காலை 11 மணிக்கு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு தொடர்பான பிரச்சனைகளும் இங்கு விவாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 7, 2026

பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவி சாதனை!

image

வேப்பந்தட்டை, முஹம்மது பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ரஸ்மிதா ஹனின், மாநில அளவிலான ஆங்கில போட்டியில் 3-ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் மிருணாளினி பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!