News April 25, 2024

திருச்சி: விவகாரத்தில் இளைஞர் தற்கொலை

image

தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அப்பகுதி பொதுமக்களிடம் பலகார சீட்டு, சிறுசேமிப்பு சீட்டு நடத்தி சுமார் 1 கோடி அளவில் பணம் வசூலித்துள்ளார்.இந்நிலையில் சீட்டு கட்டிய சிலர் பணத்தை திருப்பி கேட்டனர்.பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மன விரக்தியில் இருந்த ராஜா நேற்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News March 7, 2026

மிகுந்த முக்கியதும் பெறும் திருச்சி!

image

திருச்சி மாவட்டத்திலிருந்து வரலாற்றிலே 4 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர். முன்னதாக திருச்சி மக்களவை எம்பியாக துரை வைகோ உள்ள நிலையில், துவரங்குறிச்சியை சேர்ந்த கவிஞர் சல்மா மாநிலங்களவை எம்பியாக உள்ளார். இந்நிலையில், மேலும், திமுகவின் திருச்சி சிவா, காங்., சார்பில், கிறிஸ்டோபர் திலக்கும் மாநிலங்களவை உறுப்பினராக செல்ல உள்ளனர். இதனால், திருச்சி மாவட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என பேசப்படுகிறது.

News March 7, 2026

திருச்சி: நாய்க்குட்டிகளை கொன்ற பெண் கைது

image

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த மீனாட்சி மிஸ்ரா என்ற பெண், தெரு நாய் குட்டிகளை சுவரில் வீசி எறிந்து கொள்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து பீப்பிள் ஃபார் அனிமல் என்ற அமைப்பின் சார்பில், அந்த பெண்ணை கைது செய்ய கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஜீயபுரம் காவல்துறையினர் மீனாட்சி மிஸ்ராவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 7, 2026

திருச்சி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

திருச்சி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!