News April 25, 2024
திருச்சி: விவகாரத்தில் இளைஞர் தற்கொலை

தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அப்பகுதி பொதுமக்களிடம் பலகார சீட்டு, சிறுசேமிப்பு சீட்டு நடத்தி சுமார் 1 கோடி அளவில் பணம் வசூலித்துள்ளார்.இந்நிலையில் சீட்டு கட்டிய சிலர் பணத்தை திருப்பி கேட்டனர்.பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மன விரக்தியில் இருந்த ராஜா நேற்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News August 22, 2025
ஸ்ரீரங்கம் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

தமிழகத்தில் முக்கியமான 12 கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய இரண்டு கோயில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 22, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சியில் நாளை (ஆக.22) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது அரியமங்கலம் பிரகாஷ் திருமண மண்டபம், பாலகிருஷ்ணம்பட்டி பி.மேட்டூர் சமுதாயக்கூடம், லால்குடி சப்தகிரிவரர் கோவில் மண்டபம், துறையூர் ராஜ் திருமண மண்டபம், மண்ணச்சநல்லூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபம், மருங்காபுரி முத்தாழ்வார் பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
திருச்சியில் எடப்பாடி பழனிசாமி 3 நாள் சுற்றுப்பயணம்

திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 23-ம் தேதி திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி பகுதியிலும், 24-ம் தேதி மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறியிலும், 25-ம் தேதி மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து பேசுகிறார்.