News November 26, 2025
சென்னை: பொதுவெளியில் பெண்களிடம் ஆபாச சைகை

சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம், பாலியல் ரீதியாக ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, உ.பியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் சென்னை நகரில் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.
Similar News
News March 7, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
சென்னை: அஷ்டலட்சுமி கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையோரம் அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. இங்கு மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையும். உடல்நலம்பெற ஆதிலட்சுமியும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியும், தைரியம் பெற தைரியலட்சுமியையும் பிரார்த்திக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 7, 2026
சென்னையில் சம்பளப் பிரச்னையா?

சென்னை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <


