News November 26, 2025
சென்னை: பொதுவெளியில் பெண்களிடம் ஆபாச சைகை

சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம், பாலியல் ரீதியாக ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, உ.பியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் சென்னை நகரில் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.
Similar News
News March 13, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 13, 2026
சென்னை: ரேஷன் அட்டையில் திருத்தமா?

சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்/ பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு ஆகியவற்றில் மாற்றம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News March 13, 2026
சென்னை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் அசோக்குமார் (38). இவர் அதேப் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று அதேப் பகுதியை சேர்ந்த +1 படிக்கும் 17 வயது மாணவி, பொருள் வாங்க வந்த போது, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


