News November 26, 2025
வாக்காளர் பட்டியலில் 54,913 இறந்தவர்களின் பெயர்கள்

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் தகவலில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் இதுவரை 76 ஆயிரம் பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர்களில் 54 ஆயிரத்து 913 பேர் இறந்தவர்கள் என்றும் நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் 18933 எனவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்கள் 2529 என மொத்தம் 76 ஆயிரம் பேர் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
BREAKING திருநெல்வேலி: பஸ் மோதி இருவர் பலி

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே இன்று கட்டுப்பாட்டை இழந்த கேரள அரசுப் பேருந்து மோதி அருகில் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஹரிஹரசுதன்(26), நாகராஜன் (25) ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பேருந்தை பறிமுதல் செய்தனர்.
News March 6, 2026
திருநெல்வேலி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <<-1>>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க
News March 6, 2026
நாங்குநேரி: கொலையானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரை வெட்டி கொலை செய்தது. இதில் பலியான மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்தினரை நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று வீட்டில் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அதேபோல் வட மாநில தொழிலாளி திரிநாத் கட்டாவின் குடும்பத்தினருக்கும் நிதி உதவி வழங்கினார்.


