News November 26, 2025

திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் பரிதாப பலி

image

அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (24) என்பவர் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகளை முடிப்பதற்காக நேற்று வேலைக்கு சென்ற வெங்கடேசன் எலக்ட்ரிக்கல் பணியை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News March 14, 2026

திருச்சி: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் வீரபாண்டி (75). இவர் லாரியில் தைலமரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கையில் இருந்து மணப்பாறைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கட் நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே அவர் லாரியை திருப்ப முயன்ற போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சிமெண்டு கெமிக்கல் ஏற்றிச் சென்ற லாரி, மரக்கட்டைகள் ஏற்றிய லாரி மீது மோதியது. இதில் இரு லாரிகளும் கவிழ்ந்தன.

News March 14, 2026

திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

image

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 24.11.2025 திங்கள்கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளுர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று (14.03.2026) சனிக்கிழமையன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்படும் என திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா அறிவித்துள்ளார்.

News March 14, 2026

திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

image

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 24.11.2025 திங்கள்கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளுர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று (14.03.2026) சனிக்கிழமையன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்படும் என திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!