News November 26, 2025
திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன்

நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று விளையாடி கொண்டிருந்த போது 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைத்தனர்.
Similar News
News November 28, 2025
திருவாரூர் மாவட்டத்தில் தடை

திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முத்துப்பேட்டை, ஜாம்பவனோடை, செங்காடு, முனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவுறித்துள்ளது.
News November 28, 2025
திருவாரூர்: மழைக் கால அவசர உதவி எண்கள் வெளியீடு

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பொதுமக்கள் கவனத்திற்கு – பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 1077,93456440279,04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அரை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு- 101, எண்களை தொடர்பு கொள்ளவும்
News November 28, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 8.12.2025 காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் சான்றிதழ் உடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


