News November 26, 2025
தர்மபுரி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மஜித் தெருவைச் சேர்ந்த நெடுஞ்செழியன். இவரது மனைவி தனலட்சுமி. திருமணமாக 7 ஆண்டுகள் ஆன நிலையில் குடும்ப சண்டை காரணமாக தனலட்சுமி இன்று(நவ.25) மாலை 4 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பு குறித்து அருர் கோட்டாட்சியர் செம்மலை மற்றும் பாப்பிரெட்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
Similar News
News November 27, 2025
தருமபுரி எழுத்தாளர்களுக்கு நிதியுதவி!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் ஆண்டும் தோறும் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா ரூ.1,00,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் பெற்று கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் (இன்று.27) அறிவித்தார்.
News November 27, 2025
தருமபுரி: தொழில் தொடங்க கடனுதவி – ஆட்சியர் அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர்களாக விரும்பும் மகளிர் மற்றும் திருநங்கை தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும். கடன் தொகை ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் வழங்கப்படும் என இன்று (நவ.27) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை www.msmeonline.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04342-230892, 8925533941, 8925533942 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். என ஆட்சியர் சதிஷ் அறிவித்தார்.
News November 27, 2025
தருமபுரியில் வாசக்டமி இருவார விழிப்புணர்வு பேரணி

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டின் உலக நவீன வாசக்டமி இருவார விழிப்புணர்வு பேரணி இத்தினத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இன்று (நவ.27) மதியம் 1 மணி அளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு உலக நவீன வாசக்டமி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


