News April 25, 2024
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் சிறப்பு!

தென்காசி நகரில் உள்ள காசி விஸ்வநாதன் கோவில், உலகம்மன் கோவில் அல்லது தென்காசி பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிறது. கிபி.1445-1446 இல் பரக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. சிற்றாறு எனும் ஆற்றங்கரையில் இக்கோவில் உள்ளது. இக்கோவில் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுகள் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளது.
Similar News
News September 26, 2025
தென்காசி மக்களே இதை நம்பாதீங்க…!

தென்காசி மக்களே ஆடைகளுக்கு ₹2500-க்கு மேல் பில் செய்தால் 18% ஜிஎஸ்டி, அதற்குக் குறைவாக இருந்தால் 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. துணிக்கடைகளில் ஒவ்வொரு ஆடைக்கும் அதன் விலையின் அடிப்படையில் தான் ஜிஎஸ்டி (GST) கணக்கிடப்படுகிறது. எனவே, பில்லைப் பிரித்து வாங்குவதால் ஜிஎஸ்டி குறையாது. உங்களுக்கு தெரிஞ்சுவங்க ஏமாறாமல் இருக்க இந்த தகவலை SHARE பண்ணுங்க…
News September 26, 2025
தென்காசி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News September 26, 2025
தென்காசி: 2 சிறுவர்கள் மீது வழக்கு

தென்காசி கீழப்புலியூரில் வசிக்கும் 68 வயது அலிஷேக் மன்சூர், செப். 22 இரவு வாய்க்கால் பாலம் அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். தென்காசி போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், விபத்தை ஏற்படுத்தியது ஒரு சிறுவன் என்பதும், அவனுக்கு வாகனம் கொடுத்தவர் அகமதுஷா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் மற்றும் அகமதுஷா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.