News November 25, 2025

பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் துவக்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரத்தினை கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.25)ஆம் தேதி அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 11, 2026

கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News March 11, 2026

தேர்வு மையங்களை பார்வையிட்ட மாவட்ட கல்வி அலுவலர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 94 தேர்வு மையங்களில் 10 வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. 20274 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். 3 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர் ஆகியோரின் தலைமையில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர். முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களை பார்வையிட்டார்.

News March 11, 2026

கழிவறை அலுவவலகமாக மாறிய அவலம்!

image

சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பணிபுரியும் நேரக் காப்பாளர் முறையான அலுவலக வசதி இல்லாததால், சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காகக் கட்டப்பட்ட பொது சுகாதாரக் கழிவறையைத் தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாகப் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளருக்குத் தனி அலுவலகம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!