News November 25, 2025
போக்குவரத்து ஊழியர்களுக்கு ₹860 கோடி பணப்பலன்

போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ₹860 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2024 மே – ஜூலை வரை ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கு பணப்பலன் வழங்குவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு பல ஆண்டுகளாக பணப்பலன் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 19, 2026
அரசியல் சர்ச்சையில் சிக்கிய ‘துரந்தர்-2’

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘துரந்தர்-2’ திரைப்படம் அரசியல் சர்ச்சைகளையும் கூடவே அழைத்து வந்துள்ளது. குறிப்பாக பிரபல தாதா தாவுத் இப்ராகிம் உடன் காங்கிரஸுக்கு மறைமுக தொடர்பு, பாஜக ஆட்சியின் பண மதிப்பிழப்பு எனச் சர்ச்சையான விவகாரங்கள் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. இதற்கு SM-ல் ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கமெண்ட்
News March 19, 2026
திமுக அமைச்சருக்கு அதிர்ச்சி

வரும் தேர்தலில் இளைஞர்களை அதிகளவில் தேர்தல் களத்தில் இறக்கிவிட திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாம். அந்த வகையில் திருமயம் தொகுதியில் உதயநிதிக்கு மிக நெருக்கமான புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் கைலாசத்தை போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாம். இதனால், இந்த தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் ரகுபதிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News March 19, 2026
இழுபறிக்கு இப்படி ஒரு காரணமா?

புதிய தமிழகம் கட்சி மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய இசைவு தெரிவித்துள்ளது. ஆனால், கிருஷ்ணசாமி வைத்த நிபந்தனைகளால் சற்று குழப்பம் அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு 4 சீட்டுகள் வேண்டும். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான சந்தன பிரியாவுக்கு MLA சீட்டுக் கொடுக்கக் கூடாது என கூறியதால் EPS அப்செட்டில் உள்ளதாக சொன்னாராம்.


