News April 25, 2024

நிர்மலா தேவி வழக்கில் நாளை தீர்ப்பு

image

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 2016இல் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். இதில் அனைத்துத் தரப்புச் சாட்சிகளிடமும் நடைபெற்ற விசாரணை நிறைவுபெற்றதைத் தொடர்ந்து நாளை காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Similar News

News March 11, 2026

இன்னும் முடியவில்லையா திமுக – காங்., பஞ்சாயத்து?

image

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அறிவாலயத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதாம். அதில், திமுக போட்டியிட விரும்பும் சில தொகுதிகளை, காங்கிரஸும் குறிவைப்பதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாக பேசப்படுகிறது.

News March 11, 2026

பலன்களை அள்ளி தரும் சுண்டைக்காய்!

image

➤சுண்டைக்காய் சாம்பார், காரக்குழம்பு ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கும். ➤வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உள்ளதாக அகத்தியர் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ➤இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT.

News March 11, 2026

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

image

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்.6-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தேர்வுகளை 8,82,806 மாணவ, மாணவிகள், 25,801 தனித் தேர்வர்கள், 395 சிறைவாசிகள் என மொத்தமாக 9,09,002 பேர் எழுதவுள்ளனர். தேர்வுப் பணிகளில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 5,000 பறக்கும் படையினர் ஈடுபடவுள்ளனர். ALL THE BEST STUDENTS

error: Content is protected !!