News November 25, 2025

Ro-Ko இல்லாததால் தள்ளாடுகிறதா இந்தியா?

image

தற்போது கவுகாத்தி டெஸ்டில் இந்திய அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இந்திய அணியின் இந்த நிலைக்கு, கோச் கம்பீரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இதில் மற்றுமொரு பரிமாணமும் உள்ளது. ரோஹித், கோலி ஆகியோர் இருந்திருந்தால், சொந்த மண்ணில் இந்திய அணி இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது என சில நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News March 18, 2026

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்

image

கேரளத்தில் CPM மூத்த தலைவர் TK கோவிந்தன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தளிப்பறம்பா தொகுதியில் சொந்த கட்சி வேட்பாளர் PK ஷியாமலாவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட முயன்றதால் கோவிந்தன் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. பதவி ஆசையால், காங்., கைக்கூலியாக கோவிந்தன் மாறிவிட்டதாக CPM நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சீட்டு கொடுக்காததால் <<19403862>> CPI-ன் MLA முகுந்தன்<<>>, நேற்று பாஜகவில் இணைந்தது கவனிக்கத்தக்கது.

News March 18, 2026

900 பேர் பலி.. அடுத்த சோகம்

image

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக மார்ச் 2-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த கொடூர தாக்குதல்களில் சிக்கி லெபனானில் 67 பெண்கள் மற்றும் 111 குழந்தைகள் உட்பட 912 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், 2,221 படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

News March 18, 2026

எந்த வயதில் தத்தெடுத்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : SC

image

3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சட்டப்பிரிவு 60(4)-ஐ SC ரத்து செய்துள்ளது. ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை எனவும், தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும், தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!