News April 25, 2024

குண்டு சுடும் பயிற்சி

image

தேனி மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் அணைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வருடம் தோறும் குண்டு சுடும் பயிற்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள குண்டு சுடும் பயிற்சி தளத்தில் வருகின்ற 26.04.2024 முதல் 18.05.2024 வரை தேனி மாவட்டத்தை சேர்ந்த காவல் துறையினருக்கு குண்டு சுடும் பயிற்சி நடைபெற உள்ளது என மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News January 2, 2026

தேனி: மனைவியை திருமணம் செய்தவருக்கு கத்திக்குத்து

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்ரகாளி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜன.1) பத்திரகாளியின் முதல் கணவரான செல்லப்பாண்டி என்பவர் ஜெயக்குமார் உடன் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 2, 2026

தேனி: 10th தகுதி.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தேனி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10th படித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் உடனே SHARE பண்ணுங்க. தேர்வு செய்யப்படுவோர் மதுரை, நெல்லை அருகே வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

News January 2, 2026

தேனி: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்… சடலம் மீட்பு

image

கூடலுார் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் நேற்று முன்தினம் புல் அறுக்க சென்ற சங்கர் அவரது மனைவி கணேஸ்வரி ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரையும் தேடினர். 2வது நாளாக நேற்று முன்தினம் (டிச.31) நடைபெற்ற தேடுதல் பணியில் கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டது. சங்கர் உடல் கிடைக்காததால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!