News April 25, 2024

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க…

image

*நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
*குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம்.
*வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும்.
*லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்.
*தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
*வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இரவில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம்.

Similar News

News November 13, 2025

தமிழ் நடிகர் மரணம்.. நெஞ்சை உலுக்கிய சோகம்

image

‘கொள்ளி வைக்க ஒரு ஆள் வேண்டாமா?’ என்ற வார்த்தையின் வலியை அபிநய்யின் இறுதிச்சடங்கு உணர்த்திவிட்டது. இறுதிச்சடங்கு செலவை தாம் ஏற்க நேரிடுமோ என்ற எண்ணத்தில், உறவினர்கள் கூட இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இப்படி ஒரு கொடுமையான முடிவா நமக்கு என்று அபிநய்யின் ஆத்மா எண்ணிய நேரத்தில், KPY பாலா உள்ளிட்ட சிலரின் முயற்சியால், தூரத்து உறவினர் ஒருவரை வரவழைத்து கொள்ளி வைத்துள்ளனர்.

News November 13, 2025

81.37% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள்: ECI

image

கடந்த நவ.4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (நவ.13) மதியம் 3 மணி வரை 81.37% வாக்காளர்களுக்கு SIR கணக்கீட்டு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 5.21 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

News November 13, 2025

நாட்டாமை சாதிப்படம் கிடையாது: சரத்குமார்

image

‘நாட்டாமை’ சாதிப்படம் கிடையாது என்று சரத்குமார் கூறியுள்ளார். தீர்ப்பு வழங்கக்கூடிய ஒருவரின் திறன் உள்ளிட்ட பண்புகளை பற்றி மட்டுமே சொல்லக்கூடிய படமாக அது இருந்தது என்றும், ‘தேவர் மகன்’ படமும் சாதியை திணிக்கும் படமல்ல எனவும் விளக்கமளித்துள்ளார். மாரி செல்வராஜின் படங்கள், ஏற்கெனவே நிகழ்ந்தவற்றை மீண்டும் அழுத்தமாக கூறுவதாக உள்ளதாகவும், தனக்கு சமத்துவமே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!